முந்தானை முடிச்சு தொடரில் கந்தசாமிக்கு மூன்று மகன்கள். உதிரிப்பூக்கள் தொடரில் சிவனேசனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். “நாதஸ்வரம்” தொடரில் மகாவுக்கு ஒருதங்கை ஒரு தம்பி என மூன்று பேர்.. அடுத்து வரும் திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா சகோதரி்கள் மூன்று பேர்
தங்கம் தொடரில் கங்கா சகோதரிகள் மூன்று பேர். தென்றல் தொடரில் கதாநாயகியுடன் சித்தி மகன், மகளுடன் சேர்த்து மூன்று பேர் ‘செல்லமே’ தொடரில் கதாநாயகன் வடமலைக்கு இரண்டு சகோதரிகள் என்பதால் அவர்கள் மூன்றுபேர். சமீபத்தில் துவங்கிய ஆண்பாவம் தொடரிலும் கூட மாதவனின் அத்தைக்கும் மூன்று மகள்கள். அழகி தொடரிலும் கதாநாயகிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று பேர்.
எல்லா சீரியல்களிலும்மூன்று குழந்தைகள் என்பது சென்டிமென்டா அல்லது நிறைய பேர் இருந்தால் கதையை வளர்க்க வசதியாக இருக்குமென்பதற்காக வா ??
திங்கள், 26 மார்ச், 2012
சனி, 17 மார்ச், 2012
உடல் வலியைப்போக்க குடிப்பதுதான் ஒரே வழியா?
‘திருமதி செல்வம்’ தொடரில் ஒரு நல்லவனை குடிக்க வைத்து அவனுக்கு கெட்ட பெயர் வரவைத்து விட்டார்கள் தொடரின் தயாரிப்பாளர்கள். அவனது மனைவி தற்கொலை செய்து கொள்ள முயல அதனால் மனம் மாறிய செல்வம் இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறானாம்.
அவன் குண்டர்களால் தாக்கப்பட்டு கைஎழும்பு முறிந்து போகிறது. அந்த வலி தெரியாமல் இருக்க நாட்டு வைத்தியர் சிறிது குடிக்க வைக்கிறாராம். அதனால் வலி வரும் போதெல்லாம் குடிக்கிறானாம். அப்படி குடிக்கும் போது மனைவிக்குத் தெரியக் கூடாது என்று நந்தினி வீட்டில் தங்குவானாம் கதையை நகர்த்துவதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிப்பதா?
வலி வருகிற ஒவ்வொருவரும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? வலியைப் போக்க குடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா? கையில் வலி இருந்தால் பணக்கார செல்வம் ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க மாட்டாரா?!! குடித்துவிட்டு தனக்கு பல விதத்திலும் உதவி செய்த நந்தினிக்கு கஷ்டம் வருவதுபோல ஒரு செயலை ஆரம்பத்திலிருந்து நல்லவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் செய்வானா?
‘தொடர்களை எப்படித்தான் பார்க்கிறீர்களோ?’ என்று பலர் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட தொடர்களில் இதையெல்லாம் யோசிப்பது தவறுதானோ!!
அவன் குண்டர்களால் தாக்கப்பட்டு கைஎழும்பு முறிந்து போகிறது. அந்த வலி தெரியாமல் இருக்க நாட்டு வைத்தியர் சிறிது குடிக்க வைக்கிறாராம். அதனால் வலி வரும் போதெல்லாம் குடிக்கிறானாம். அப்படி குடிக்கும் போது மனைவிக்குத் தெரியக் கூடாது என்று நந்தினி வீட்டில் தங்குவானாம் கதையை நகர்த்துவதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிப்பதா?
வலி வருகிற ஒவ்வொருவரும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? வலியைப் போக்க குடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா? கையில் வலி இருந்தால் பணக்கார செல்வம் ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க மாட்டாரா?!! குடித்துவிட்டு தனக்கு பல விதத்திலும் உதவி செய்த நந்தினிக்கு கஷ்டம் வருவதுபோல ஒரு செயலை ஆரம்பத்திலிருந்து நல்லவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் செய்வானா?
‘தொடர்களை எப்படித்தான் பார்க்கிறீர்களோ?’ என்று பலர் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட தொடர்களில் இதையெல்லாம் யோசிப்பது தவறுதானோ!!
புதன், 15 பிப்ரவரி, 2012
நல்லவன் குடிக்கமாட்டான்; அப்படி குடிப்பவன் நல்லவனாக மாட்டான்
“திருமதி செல்வம்” தொடரில் செல்வம் கதாபாத்திரத்தை மிக நல்லவராக உருவாக்கிவிட்டு அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குடிக்க ஆரம்பித்து பின் மொடா குடியனாக ஆகிவிட்டதாகவும், குடிகாரர்கள் செய்யும் எல்லா அட்டகாசங்களையும் செல்வம் செய்வதாகவும் காட்டி வருகிறார்கள். இது ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இல்லை.
ஒரு நல்லவன் எத்தனை முறை எத்தனை பேரால் கட்டாயாப் படுத்தப் பட்டாலும்கூட அவன் குடிக்கமாட்டான். அப்படியே குடித்தால்கூட அடாவடித்தனமாக நடக்கமாட்டான் இது நிச்சயம். இப்படியெல்லாம் நடப்பவனை நல்லவன் என்று எப்படிச் சொல்லமுடியும்.
உங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டவேண்டும், எதிர்பாராத திருப்பங்கள் வர வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் இயற்கைக்கு மாறாகக் காட்டுவதா? நல்லவனே குடிப்பதாகக் காட்டுவதால் இன்னும் சிலபேர் குடிகாரர்களாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
பகல் நேரத்தில் ஒளிபரப்பான திருமதி செல்வம் அதன் கதை அமைப்பு நன்றாக இருந்ததால் இரவு நேர ஒளிபரப்பாக மாற்றப்பட்டது. செல்வத்தின் தம்பி, செல்வத்தின் அப்பா குடிகாரர்கள்தான்; அவர்கள் நல்லவர்களாகக் கட்டப்படவில்லை. செல்வம் நல்லவன், யாருக்கும் கெடுதல் செய்யாதவன், எல்லோருக்கும் நல்லதே செய்பவன், பல கஷ்டங்களுக்கிடையே முன்னேறி வருபவன் இப்படி மாறியதாகக் காட்டுவதை ஒத்துக் கொள்ளவே முடியாது.
ஒரு நல்லவன் எத்தனை முறை எத்தனை பேரால் கட்டாயாப் படுத்தப் பட்டாலும்கூட அவன் குடிக்கமாட்டான். அப்படியே குடித்தால்கூட அடாவடித்தனமாக நடக்கமாட்டான் இது நிச்சயம். இப்படியெல்லாம் நடப்பவனை நல்லவன் என்று எப்படிச் சொல்லமுடியும்.
உங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டவேண்டும், எதிர்பாராத திருப்பங்கள் வர வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் இயற்கைக்கு மாறாகக் காட்டுவதா? நல்லவனே குடிப்பதாகக் காட்டுவதால் இன்னும் சிலபேர் குடிகாரர்களாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
பகல் நேரத்தில் ஒளிபரப்பான திருமதி செல்வம் அதன் கதை அமைப்பு நன்றாக இருந்ததால் இரவு நேர ஒளிபரப்பாக மாற்றப்பட்டது. செல்வத்தின் தம்பி, செல்வத்தின் அப்பா குடிகாரர்கள்தான்; அவர்கள் நல்லவர்களாகக் கட்டப்படவில்லை. செல்வம் நல்லவன், யாருக்கும் கெடுதல் செய்யாதவன், எல்லோருக்கும் நல்லதே செய்பவன், பல கஷ்டங்களுக்கிடையே முன்னேறி வருபவன் இப்படி மாறியதாகக் காட்டுவதை ஒத்துக் கொள்ளவே முடியாது.
திங்கள், 6 பிப்ரவரி, 2012
ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதா?
“திருமதி செல்வம்” தொலைக் காட்சித் தொடரில் வரும் கதாநாயகன் செல்வம் மிகவும் நல்லவன், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவன், எந்தச்சூழ்நிலையிலும் சரியாகவே பேசுவான் சரியானதையே செய்வான் என அவனது பாத்திரத்தை படைத்து ஆரம்பத்திலிருந்தே அவனது செயல்களை நல்லவிதமாகவே காண்பித்து வந்தார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட செல்வம் தன் தொழில் ரீதியாக மது அருந்த கட்டாயப்படுத்தப்படுகிறான் அதனால் குடிபோதையில் சுய நினைவில்லாமல் வீட்டுக்குவருகிறான் என்று கண்பித்தார்கள். அடுத்ததாக அவனது புது நண்பரான சேட் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்து அதனால் அவன் வீட்டுக்கு வெளியே குடிபோதையில் புல்தரையில் விழுந்து கிடந்ததாகக் காட்டினார்கள்.
இப்போதோ அவனது தங்கை ராணி கணவனின் நிபந்தனையை ஏற்று செல்வத்தை வேண்டாமென சொல்லிவிட்டு கணவனுடன் வாழப் போகிறேன் என்று சொல்லவே மனம் வருந்தி தன் சோகத்தை மறப்பதற்காகக் குடிக்கிறான் என்று சொல்கிறார்கள். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியே புல் தரையில் விழுந்து கிடப்பதாககக் கதை போகிறது.
நல்ல குணாதிசையம் உள்ளவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் முதல் முறை குடிப்பதைத் தவிர்க்க முடியாதவனாக இருந்திருக்கலாம். இரண்டாவது முறை கூல்ட்ரிங்கில் கலந்து கொடுத்த போது அந்த நல்லவன் ஒரு கிளாஸோடு நிறுத்தியிருக்கலாமே.
எப்போதும் நல்லதையே செய்யும் செல்வம் தங்கை தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாளே என்று வருந்துபவன், குடிக்கத்தான் போக வேண்டுமா? அதுவும் தானே தேடிப்போய் குடிப்பதாகக் காட்டுவதும் கூட ஓவர்தானே! சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா? விகடன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா?!
ஆனால் அப்படிப்பட்ட செல்வம் தன் தொழில் ரீதியாக மது அருந்த கட்டாயப்படுத்தப்படுகிறான் அதனால் குடிபோதையில் சுய நினைவில்லாமல் வீட்டுக்குவருகிறான் என்று கண்பித்தார்கள். அடுத்ததாக அவனது புது நண்பரான சேட் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்து அதனால் அவன் வீட்டுக்கு வெளியே குடிபோதையில் புல்தரையில் விழுந்து கிடந்ததாகக் காட்டினார்கள்.
இப்போதோ அவனது தங்கை ராணி கணவனின் நிபந்தனையை ஏற்று செல்வத்தை வேண்டாமென சொல்லிவிட்டு கணவனுடன் வாழப் போகிறேன் என்று சொல்லவே மனம் வருந்தி தன் சோகத்தை மறப்பதற்காகக் குடிக்கிறான் என்று சொல்கிறார்கள். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியே புல் தரையில் விழுந்து கிடப்பதாககக் கதை போகிறது.
நல்ல குணாதிசையம் உள்ளவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் முதல் முறை குடிப்பதைத் தவிர்க்க முடியாதவனாக இருந்திருக்கலாம். இரண்டாவது முறை கூல்ட்ரிங்கில் கலந்து கொடுத்த போது அந்த நல்லவன் ஒரு கிளாஸோடு நிறுத்தியிருக்கலாமே.
எப்போதும் நல்லதையே செய்யும் செல்வம் தங்கை தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாளே என்று வருந்துபவன், குடிக்கத்தான் போக வேண்டுமா? அதுவும் தானே தேடிப்போய் குடிப்பதாகக் காட்டுவதும் கூட ஓவர்தானே! சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா? விகடன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா?!
ஞாயிறு, 29 ஜனவரி, 2012
தொலைக்காட்சி தொடர்களுக்கு கதைப்பஞ்சமா?!
“திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள். “தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு தொடர்களுமே ஒரே தயாரிப்பாளர் தயாரிப்பதுதான்.
“இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்??” என்று என் முந்திய பதிவில் கேட்டிருந்தேன். இப்படி ஒரே தயாரிப்பாளர் தயாரிக்கும் இரு தொடர்களிலுமே ஒரே மாதிரி கதையை அமைப்பதன் காரணம் கதைப் பஞ்சம் என்று கொள்வதா??
சனி, 21 ஜனவரி, 2012
எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்?
“முந்தானை முடிச்சு’” தொடரில் கதாநாயகி தமிழரசியை அவரது தாய் வீட்டைவிட்டு துறத்திவிட்டார்கள். (இதே தொடரில் தமிழரசியின் தங்கையை அவளுடைய கணவனே துறத்திவிட்டு பின் வீட்டில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதையும் இங்கு டுறிப்பிடலாம்)
“நாதஸ்வரம்” தொடரில் மகேஸ் வீட்டில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பdudtdடுகிறாள். ‘திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள்.
“தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது. ‘’செல்லமே’’’ தொடரில் அமுதா தானாகவே வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் கொஞ்சம் நாட்கள் கழித்து வீடு திரும்புவதாகவும் காட்டினார்கள்.
இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்??
“நாதஸ்வரம்” தொடரில் மகேஸ் வீட்டில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பdudtdடுகிறாள். ‘திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள்.
“தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது. ‘’செல்லமே’’’ தொடரில் அமுதா தானாகவே வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் கொஞ்சம் நாட்கள் கழித்து வீடு திரும்புவதாகவும் காட்டினார்கள்.
இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்??
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
பொங்கல் நல் வாழ்த்துக்கள்
கதாநாயகனே இறந்ததாகச் சொன்னால் யார்தான் நம்புவார்கள்?” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில நாட்களிலேயே நாதஸ்வரம் தொடரின் கதாநாயகனும், கதாநாயகியும் கோடைக்கானல் மலையிலிருந்து விழுந்த்தாகக் காண்பித்தார்கள். இதை யார்தான் நம்புவார்கள்? எண்று அவர்களுக்கே தோன்றியிருக்க வேண்டும். முதலில் கதாநாயகன் உயிரோடு இருப்பது போல காண்பித்து ஒரு நாள் கழித்து கதாநாயகியும் காலில் அடிபட்டு பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.
அதேபோல “முந்தானை முடிச்சு’” கதாநாயகி தமிழரசியும் இறந்துபோய் அவளது உடலை மார்ச்சுவரிக்கே கொண்டுபோய்விட்டதாகக் காண்பித்தார்கள். கதாநாயகி இறந்ததாகக் காட்டுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்பதை இப்போது நன்கு உணர்ந்து தமிழரசி உயிர் பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.
இனி இது போன்ற காட்சிகளே தம் தொடர்களில் வராமல் டைரக்டர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோமா?.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்
என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,
நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்
அதேபோல “முந்தானை முடிச்சு’” கதாநாயகி தமிழரசியும் இறந்துபோய் அவளது உடலை மார்ச்சுவரிக்கே கொண்டுபோய்விட்டதாகக் காண்பித்தார்கள். கதாநாயகி இறந்ததாகக் காட்டுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்பதை இப்போது நன்கு உணர்ந்து தமிழரசி உயிர் பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.
இனி இது போன்ற காட்சிகளே தம் தொடர்களில் வராமல் டைரக்டர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோமா?.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்
என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,
நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
