வியாழன், 19 செப்டம்பர், 2013

இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் தொடர் இயக்குனர்கள்.



Ø  உதிரிப்பூக்கள் தொலைக்கட்சித் தொடரில் இறந்ததாகக் காட்டப்பட்ட கதாநாயகியும், கதாநாயகியின் அம்மாவும் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று கதையை நகர்த்துகிறார்கள் என்று பார்த்தால் இதற்கு போட்டியாக முந்தானை முடிச்சு தொடரில் இறந்த- இல்லை இல்லை - கொலை செய்யப்பட்ட சதீஷ் பாத்திரத்திற்கு திடீரென உயிர் கொடுத்திருக்கிறார்கள். இறந்த சதீஷ்னுடைய  தம்பி அவனைப்போலவே இருக்கிறான் இருவரும் இரட்டைப் பிறவி (ட்வின்ஸ்) என்றும் சதீஷினுடைய தம்பியை சதீஷ் போல நடிக்க வைக்க  திட்டமிடுகிறாளாம் வில்லி பிரேமா. எப்படியோ இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்களாக மாறி இருக்கிறார்கள் தொடர் இயக்குனர்கள். கதையை நீட்டிக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் வர்கள். 


Ø  யாரிடமாவது  அவர்கள்  குடியிருக்கும் வீட்டைக் காலிசெய்யச் சொன்னால் ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ டயம் தாருங்கள் வேறு வீடு பார்த்துக்கொண்டு போய்விடுகிறோம் என்றுதான் சொல்வார்கள்..  ஆனால் தொடர்களில் மட்டும் வேறு விதமாகத்தான் நடக்கும்.  யாரையும் குடும்பத்தோடு வெளியே போய்விடுங்கள் என்று சொன்னால் அவர்கள் எல்லோரும் (பெரியவர்கள் சிறியவர்கள் வித்தியாசமில்லாமல்) வீட்டைவிட்டு வெளியே போய் ரோட்டில் இறங்கி நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.. அடுத்த வேளைக்கு எங்கு போவோம் எப்படி இருப்போம் என்று எதையும் யோசிக்க மாட்டார்கள் (அவ்வளவு ரோசம் மானம் உள்ளவர்கள்.)  யாரும் உதவ முன் வந்தாலும் அதை ஏற்கவும் அவர்களுக்கு தன்மானம் இடம் கொடுக்காது –- உதாரணம் தெய்வமகள் மற்றும் வாணி ராணி இரண்டு தொடர்களிலுமே அப்படித்தான் (அதுவும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள்) கதையில் சுவாரஸயமும் கதாபாத்திரங்கள் மேல் அனுதாபமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக எதார்த்தத்தைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இப்படியா திரைக்கதை அமைப்பார்கள்?  

புதன், 11 செப்டம்பர், 2013

இறந்து போன கதாநயாயகியின் தாயும் உயிரோடிருக்கிறாராம்





·       நெடுந்தொடர்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகியையே இறந்ததாகக் காட்டுகிறார்களே இதை எப்படி நம்புவது? என்று கேட்டு எழுதியிருந்தேன்.   உதிரிப்பூக்கள் தொடரில் கதாநாயகி சக்தி பாண்டிச்சேரியில் உயிரோடு இருப்பதாகவும் இது அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாது என்றும் கதையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். இப்போதோ திடீரென்று இதற்கும் முன்பே இறந்து போனதாகக் காட்டிய சக்தியின் அம்மா உயிரோடு இருப்பதாகவும் சக்தி தன் அம்மாவைப் சந்திப்பது போலவம் காட்டுகிறார்கள்.  கதாநாயகனோ கதாநாயகியோ அல்லது முக்கிய பாத்திரமோ இறந்து போனால் கதை சீக்கிரமே முடிந்து போய்விடுமே!  அப்புறம் அது நெடுந்தொடர் ஆகாதே! எனவே இவர்களை இறந்து போக விடமாட்டார்கள் என்று டீவி பார்ப்பவர்களுக்குத் தெரியாதா? ஏன் இப்படி இறந்து போனதாகக் காண்பிப்பதும் பின்னர் உயிரோடு இருப்பதாக்க் காட்டுவதையும் தொடர் இயக்குனர்கள் எப்போதுதான் விடப்போகிறார்களோ?


·       .பிள்ளைநிலா தொடரில் நிலா போலிசுக்குத் தெரியாமல் மறைந்து வாழும் தன் தந்தையை மற்றவர்களுக்குத் தெரியாமல் தன் வீட்டில் ஒளிய வைத்துக் கொண்டிருப்பதாகவும் அதை மற்றவர்கள் யாருமே கண்டுபிடிக்கவில்லை என்றும் தொடர் பார்ப்பவர்கள் காதுகளில் பூச் சுற்றுகிறார்கள். சரி கதைதானே விட்டுவிடலாம் என்று பார்த்தால் இப்போதோ அவர் சமையலறைக்குப் போய் தானே தோசை சுட்டு, மற்றவற்றை செய்து  சாப்பிடுவதாக்க் காட்டுகிறார்கள். மறைந்திருக்கும் அவர் கதவை கொஞ்சம் திறந்து வீட்டிலுள்ளவர்களைப் பார்ப்பது போலவும் அவர்கள் இவரைப் பார்க்காதது போலவும் காட்டுகிறார்கள். என்னதான் தீயசக்தி வீட்டில் நடமாடுவதாக வீட்டிலுள்ளவர்கள் பயந்து போய் இருப்பதாக சொன்னாலும் போலிஞுக்குப் பயந்து ஒளிந்து இருப்பவர் எந்த பயமும் இன்றி இப்படித்தான் நடந்து கொள்வாரா? 



·       மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் விநாயக சதுர்த்திக்காக ஸ்பெசல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்க கலைஞர் டீவியில் மட்டும் ‘’விடுமுறைதின’’  சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்பிக் கொண்டிருந்தார்கள்.  இவர்களுக்கு விநாயக சதுர்த்தியில  நம்கிக்கை இல்லையென்றால் அது தவறில்லை. சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தாமல் விட்டுவிட வேண்டியதுதானே. (வருமாணத்தை விட்டுவிடக்கூடாது என்பதால்தானே சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்) விநாயகர்தினத்தன்று ஒளிபரப்பப்பட்டவை விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் மற்ற விடுமுறை நாட்களிலும் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்புவார்களா? 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உலக பதிவர் திருவிழா.2013 க்கு வருகைதரும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்






இரண்டாம் ஆண்டு  உலக பதிவர் திருவிழா.2013 க்கு வருகைதரும் அனைத்து பதிவர்களையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.  





இந்த நான் இனிதே அமையவும் விழா சிறப்பாக நடைபெறவும் 
வாழ்த்துகிறேன்