ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாளுக்கும் அமுதமொழிகளுக்கு நேர்ந்த கதிதானா?









சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகி நெடுந்தொடரில் பாத்திரங்கள் வசனம் பேசாத நேரங்களில் பின்னணி இசையைப் போடுகிறார்கள். வசனத்தின் ஒலியைவிட பின்னணி இசையின் சத்தம் மிக அதிகமாக உள்ளது. அந்த பின்னணி இசை பார்ப்பவர்களின் காதுகளை பாதிக்கிறது. இது ஏதோ ஒரு சில எபிசோட்களில்தான் அப்படி இருக்கிறது என்று பார்த்தால் எல்லா நாட்களுமே அப்படி காதுகளை பாதிக்கும்படிதான் இருக்கிறது.  அந்த தொடர் தயாரிப்பாளர்கள் இதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஒளிபரப்பாகும் சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகள் புதிதாக ஏதும் பதிவு செய்யப்படவில்லை போலிருக்கிறது. ஒளிபரப்பியதையே ஒளிபரப்பி போரடிக்கிறார்கள். நாய் வால் எழுத்தாணி ஆகாது, கூட்டி பெருக்கி சுத்தப் படுத்தினாலும் சுடுகாடு வீடாகாது தாய் பேச்சைக் கேட்காத மகன் தானும் எதையும் கொடுக்கமாட்டான் பிறரையும் கொடுக்க விடமாட்டான் என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும், குருவின் உபதேசம், மனைவியிடம் பேசிய அந்தரங்கம், போன்றவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும் திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அநிகாலை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை யார் பார்த்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று சன்தொலைக் காட்சியினர் நினைகிறார்களோ?’

நாதஸ்வரக் கலைஞர் நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை அவர்களிடம் தவில் வாசித்து வந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்  அவர்கள் யாராவது எங்காவது ‘நாகப்பட்டனம்’ என்று ஊர் பெயரைச் சொன்னால் அவர் எழுந்து வணங்கிவிட்டு உட்காருவாராம். தன் குருவிடம் அவர் கொண்டிருந்த மரியாதையைப்பற்றி சுகிசிவம் அவர்கள் கூறிய விவரத்தை மீண்டும் இன்று இந்த நாள் இனியநாள் பகுதியில் ஒளிபரப்பினார்கள். போகிற போக்கைப் பார்த்தால் சுகிசிவம் அவர்களின் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சிக்கும் அமுதமொழிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஏற்படும் போல் இருக்கிறது. சன் தொலைக்காட்சியும் மறுஒளிபரப்பு தொலைக்காட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது போல தெரிகிறது..  




செவ்வாய், 15 அக்டோபர், 2013

lதொடர்கள் சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பப் படுவதால் யாருக்கு நன்மை அதிகம்?


சன்தொலைக்காட்சியில் இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த மெகாதொடர்களில் பெரும்பாலனவை சனிக்கிழமை களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. அதாவது மாலை 6.30 மணிமுதல் 9.00 மணி வரை ஒளிபரப்பப்படும் தொடர்கள் மட்டும் சனிக்கிழமைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளன. அதனால் இது ரொம்ப நாள் நீடிக்காது. உடனே சந்தோஷப் படாதீர்கள். சனிக்கிழமைகளில் 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு வேறு நேரங்களை ஒதுக்கிவிட்டு 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படும் தொடர்களையும் நீட்டித்துவிடுவார்கள் ஏனென்றால் அவற்றில் ராதிகா தொடரும் விகடன் தொடர்களும் உள்ளனவே..

இந்த தொடர்களைப்பார்த்து இவற்றிற்கு அடிக்ட் ஆகிவிட்டவர்களுக்கு இது நற்செய்தியாக இருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு சனி ஞாயிறுகளில் போர் அடிப்பது போல உணர்ந்து வந்தவர்கள்.   இத்தொடர்களால் குடும்ப உறுப்பினர்களோடு பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை, மனைவிமார்கள் கணவனையும், குழந்தைகளையும் அத்தொடர் நேரங்களில் சரியாக கவனிப்பதில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இவ்வேதனை மேலும் ஒரு நாள் கூடுவதால் அவர்கள் இந்த நீட்டிப்பை வரவேற்க மாட்டார்கள். எது எப்படியோ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விளம்பர வருமாணம் கூடுவதால் அவர்களுக்கு சந்தோஷமாகவே இருக்கும்.

இத்தொடர்களை ஜவ்வாக இழுத்து பல மாதங்கள் வருடங்கள் என நீட்டித்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு ஒவ்வொரு வாரமும் மேலும் ஒரு நாளைக்கு கதை பண்ணவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எனவே அவர்கள் எப்படி எப்படியெல்லாம் ஐடியா செய்து தொடர் பார்ப்பவர்களை இன்னும் கஷ்டப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.    

விஷேச நாட்களில் எல்லா தொலைக்காட்சி களிலும் ஒளிபர்ப்பப்படும் சிறப்பு  நிகழ்ச்சிகள் அனத்திலும் ஒரே மாதிரியே உள்ளன. எதிலும் புதுமைஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக வரஇருக்கும் திரைப்படங்களின் விளம்பர முன்னோட்டங்களாக பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளாக  நடிக நடிகையரின் ஏனோதானோ பேட்டிகளாகவே உள்ளன. அவரவர் தொலைக்காட்சியில் எது ஃபேமஸ் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதன் சிறப்பு நிகழ்ச்சி என்றும், முன்பே ஒளிபரப்பான திரைப்படங்களை சிறப்புத் திரைப்படங்கள் என்றும் போரடித்துவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வத்தையே குறைத்துவிடுவார்கள் போலிருக்கிறது





திங்கள், 7 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாள் ஆகுமா?


இந்த நாள்

இனிய நாள்

ஆகுமா?


இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் சனி ஞாயிறுகளில் சுகிசிவம் சன் தொலைக்காட்சியில் பேசி வருகிறார். தமிழகத்தில் தூங்க வைப்பதற்கு தாலாட்டு காலையில் எழுப்புவதற்கு திருப்பள்ளி எழுச்சி, இறந்தால் ஒப்பாரி என்று எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு. பாடப்பட்ட பாடலை வைத்து அது எந்த நேரத்தில் பாடப்பட்டது என்று சொல்லிவிட முடியும்..இப்படிப்பட்ட பாடல்கள் இன்று மேடைக்கச்சேரிகளாக மாறிவிட்டன. பங்கு பெறவேண்டிய மக்கள் இன்று பார்வையாளர்களாக உள்ளனர். என்று பல குறிப்புகளைச் சொன்னார் pசுகிசிவம். ஆனால் இது ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு.
எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக்கூடியவர்.சுகிசிவம். அவரது பேச்சைக் கேட்பவர்கள் சிறிதளவாவது அவர் பேசும் பிரச்சினை பற்றி யோசிப்பார்கள். இப்பகுதியை மறுஒளிபர்ப்பு செய்து அப்படிப்பட்டவரின் நேரத்தையும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நேரத்தையும் வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்? வாரத்தில் இரண்டு நாட்களே ஒளிபரப்பாகும் ‘இந்த நாள் இனிய நாள்’’ பகுதியைக்கூட புதிதாக ஒளிபர்ப்ப முடியாதா? நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இதுபற்றி யோசிப்பார்களா?  சுகிசிவத்தின் பேச்சை எதிர் பார்த்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு காலையிலேயே மறு ஒளிபரப்பைப் பார்த்தால் அந்த நாள் எப்படி இனிய நாள் ஆகும்??  



ஒரு வழியாக ஒரு மெகாத்தொடர் ‘உதிரிப்பூக்கள்’ முடித்து வைக்கப்பட்டது. இறந்து போன கதாநாயகி சக்கியும் இறந்து போன சக்தியின் தாயும் உயிரோடு இருக்கிறார்கள் என்று அவர்களை உயிரோடு கொண்டு வந்து நிறுத்தியதால் ஏதேதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் உப்புச்சப் பில்லாமல் ஏனோதானோ என்று எல்லாரும் திருந்திவிட்டார்கள் என்று தொடரை முடித்து விட்டார்கள்.
தொடரை எப்படியெல்லாம் நீட்டமுடியும் என்பதை இவ்வளவு வாரங்கள் பார்த்து வந்தவர்கள் கடைசி ஒரு வார காட்சிகளைப் பார்த்தால் தொடர் தயாரிப்பாளர்கள் நினைத்தால் ஒரு தொடரை எப்படி சீக்கிரம் முடிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.. மூன்று வில்லன்கள் ஒரே இடத்தில் இருந்தும் சிவநேசன் பேச்சைக் கேட்டு மனம் திருந்தி விடுகிறார்களாம். நிலா, நிலாவின் அப்பா, சக்தியின் மாமியார், சக்தியின் நாத்தனார்கள் எல்லோரும் திருந்திவிடுகிறார்களாம். எப்படியோ ஒருவழியாக தொடரை முடித்தார்களே என்று சந்தோஷப்படலாம்.