ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இறந்தவர் பிழைத்து வந்துவிட்டார்!

கதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்’ என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். நான் எழுதியதைப் போலவே இரண்டு மூன்று நாட்களிலேயே அந்தக் கதாநாயகன் செல்வம் ஆந்திர மாநில கடற்கரையோரம் நினைவில்லாமல் கிடந்தார் என்றும் கிராம மக்கள் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்றும் காண்பித்தார்கள்.

வில்லனாகக் கருதப்பட்டவரே (செல்வம் ஏதோ ஒரு நேரத்தில் அந்த சேட்டுக்கு செய்த உதவிக்காக) செல்வத்தைக் காப்பாற்றி அவரது குடும்பத்தினரிடம் கொண்டுவந்து விட்டுவிடுகிறார் என்று கதையைத் திருப்பிவிட்டார்கள். (வில்லனே இப்படி தாமாகவே வந்து கதாநாயகனுக்கு உதவி செய்வதை இது போன்ற தொடர்களில் அல்லது சினிமாக்களில் தான் பார்க்க முடியும் என்பது இன்னொரு கதை)

இனியாவது இது போன்ற நம்பமுடியாத ட்விஸ்ட்களை (திருப்பங்களை) தொடர்களில் வராதமாதிரி திரைக்தையை அமைப்பார்களா தொடர் தாயாரிப்பாளர்கள்.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

கதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்

கிட்டதட்ட எல்லா

தொடர்களிலும் யாவது காணவில்லை என்று சொல்வதும் அவரைத்தேடுவதுமாக கதையை நீட்டிப்பதைப் பற்றி எழுதியிருந்தேன். சில தொடர்களில் இன்னும் மோசமாக இருக்கிறது.

மாதவி என்ற தொடரில் கதாநாயகி மாதவியையே காணவில்லை இறந்து விட்டார் என்று சொல்லி சில நாட்கள் சென்ற பிறகு அவர் சாகவில்லை என்று கதையை வளர்த்தார்கள். செல்லமே தொடரில் கதாநாயகனையே காணவில்லை என்று தேடி பிறகு கிடைத்து விட்டார் என்று கதையை வளைத்தார்கள். தங்கம் தொடரில் கதாநாயகன் செல்வ கண்ணனையே இறந்ததாகக் காண்பித்து பின்னர் உயிரோடு இருப்பதாகக் காண்பித்தார்கள்.

இப்போது திருமதி செல்வம் தொடரில் கதாநாயகன் செல்வத்தைக் காணவில்லை என்று தேடி அவர் இறந்துவிட்டார் என்று சொல்லி அவருக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து முடித்துவிட்டார்கள். ஓரிரு நாட்களிலேயே அவர் ஆந்திரா கடற்கரையோரம் மயக்கத்தில் கிடந்தார் என்று சொல்லி கதையைத் திருப்பிவிட்டார்கள்.

ஒரு கதையில் கதாநாயகனை அல்லது கதாநாயகியை இறந்த்தாகச் சொல்வதை சிறு குழந்தைகூட நம்பாதே. அப்படியிருக்க கதாநாயக, நாயகியரை இறந்ததாக எப்படித்தான் கதையை அமைக் கிறார்களோ இந்த இயக்குனர்கள்?

சனி, 3 டிசம்பர், 2011

ஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஆட்டோ கட்டணம்



தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஆறு ரூபாய் என்றும் அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால் அரசு நிரணயித்த அந்த கட்டணத்தை எந்த ஆட்டோக் காரரும் பின் பற்றவில்லை.. மீட்டர் போட்டு யாரும் ஓட்டவில்லை.

ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறிய போதும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் (டீசலில் ஓடும் ஆட்டோக்களாக இருந்தாலும்) கட்டணத்தை உயர்த்திக் கேட்டார்கள் அதிக கட்டணமே வாங்கி னார்கள். இதை முறைப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பெட்ரோல் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை ஏறியது ஏறியதுதான். இப் போது குறைந்தபட்ச கட்டணமாக முப்பது ரூபாய் கேட்கிறார்கள். ஒரு கிலோமீட்டருக்கு பதினைந்து ரூபாய், பதினாறு ரூபாய் அல்லது இருபது ரூபாய் என வாய்க்கு வந்ததை கட்டணமாகக் கேட் கிறார்கள். வாடகைக் காருக்கே கி்லோமீட்டருக்கு பத்து ரூபாய் தான் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதாவது ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த அரசு முன் வருமா? உடனடியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்யவேணட்டும். எல்லா ஆட்டோக்களுக்கும மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா?,

வெள்ளி, 2 டிசம்பர், 2011

தொலைக்காட்சித் தொடரை நீட்டிக்க இப்படியும் ஒரு வழியா


நாதஸ்வரம் தொடரில் பாண்டியனையும் மகாவையும் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக இருவரையும் கண்டுபிடித்து விட்டார்கள்.  முந்தானை முடிச்சு தொடரில் காதலன் எங்கோ வேலைதேடிப் போய்விட அவனது நண்பனும் காதலியும் படாத பாடுபடுகிற போதுகூட அவன் வரவில்லையாம்.

அழகி தொடரில் மதியையும் அவளது காதலனையும் காணோம் என்று தேடி நல்லவேளையாக சீக்கிரமே கண்டுபிடித்து விட்டதாகக் காண்பித்துவிட்டார்கள். செல்லமே தொடரில் வடமலையைக் காணோம் என்று தேடினார்கள். இப்போது கதாநாயகி செல்லம்மா மட்டும் தேடிக்கொண்டிருக்கிறார். (தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியும்)
திருமதி செல்வம் தொடரில் செல்வத்தைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பகல் நேர தொடரான இளவரசியில் இளவரசியின் கணவரைக் காணவில்லை என்று தேடுவதாகக் கதை செல்கிறது

ஒருவரைக் காணவில்லை  என்று தேடுவதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசும் மற்றவர்களும் அலைவதுமாக தொடரை நீட்டிக்க ஒரு வழி இருக்கும்  போது அவ்வழியை எந்த தொடரின் இயக்குனர்தான்  விட்டுவைப்பார். அதுதான் எல்லா தொடர்களிலும் தொடர்கிறது போல இருக்கிறது.