சனி, 22 அக்டோபர், 2016

நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;?

காமெடி ஜங்சன்     

சன் தொலைக் காட்சியில் இரவு 10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி  அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்சிதான் காமெடி ஜங்சன். ஆரம்பத்தில் ஜெயச்சந்திரன் நிகழ்ச்சியை நடத்தினார். உதவிக்கு மதுரை முத்துவையும் ஆதவனையும் இணைத்தார்கள்.
எப்படி எப்படியோ நிகழ்ச்சியை நடத்தினார்கள் நடத்த உதவினார்கள் என்றும் சொல்லலாம்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தொடரை மெகா தொடர் ஆக்குவதற்காக இப்படியா செய்வது?

சன் தொலைக்காட்சியில் பகல்நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பொன்னூஞ்சல்.  இதன் கதாநாயகன் கதாநாயகி இருவரையம் ஓரம்கட்டிவிட்டு (அவர்களுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது) இடையில் வந்த பிரியாவை சுற்றி கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தொடரை மெகாதொடர் ஆக்குவதற்காக இப்படியா ரசிகர்களை முட்டாளாக்குவது.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சன் டீவியின் சறுக்கல்

சன் டீவியின் சறுக்கல்

அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி வந்த நேரத்தில்  ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகி வந்தது. என்ன காரணத்தினாலோ திடீரென இத்தொடர் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஏதாவது இட்டு நிரப்ப வேண்டுமே என்று காமெடி ஜங்ஷன் என்ற பெயரில் ஒரு காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். வழக்கமாக சன் சிங்கருக்கு செய்தது போல எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.  

புதன், 3 ஆகஸ்ட், 2016

இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக

இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக

மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன..ஆனால் அது போன்ற தொடர்கள் சன் தொலைக் காட்சியில் இதுவரை ஒளிபரப்பப்படாமல் இருந்தது.
நேரடியாக தமிழில் தயாரிக்கப் பட்ட தொடர்கள் மட்டுமே இடம் பெற்று வந்தன.  சமீப காலமாக அதுபோன்ற தொடர்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளது. இது சன் தொலைக் காட்சியின் ரசிகர்களை பெரிதும்  கஷ்டப்படுத்துவதாக உள்ளது.

வெள்ளி, 18 மார்ச், 2016

எல்லா காதலர்களும் திருமணத்திற்கு முன்னதாக எல்லை மீறி பழகுவதாகக் காண்பிப்பது முறையா?







கேளடி கண்மணி தொடரில் பிரியங்காவின் காதலன் திருமணத்திற்கு முன்னதாகவே பிரியங்காவைக் கெடுத்துவிட அவள் கர்ப்பமடைந்து விடுகிறாள்.. குலதெய்வம் தொடரில் திருமணத்திற்கு முன்னதாகவே ரோஹித்தின் காதலி கர்ப்பமாகி விட அதைக் கலைக்க அவளைத் துறத்துகிறார்களாம். தெய்வமகள் தொடரில் சத்தீஸின் காதலி கர்ப்பமாகி விட அந்த கர்ப்பத்தைக் கலைக்க பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக  வருகிறது.