ஞாயிறு, 17 நவம்பர், 2013

விபத்துக்கு காரணம் போனில் கூப்பிட்டவரா அல்லது போனில் பேசியவரா?







 
 கார் விபத்துக்குள்ளாவதற்கு செல்ஃபோனில்
கூப்பிட்டவர் காரணமா கார் ஓட்டும் போது
எடுத்துப் பேசியவர் காரணமா?







 ‘புது யுகம்’ தொலைக் காட்சியில் குரு சிஷ்யன் நிகழ்ச்சியில் நடிகர் நாசர் இயக்குனர் மிஸ்கின் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி இடம் பவற்றது. அந்நிகழ்ச்சியில் நாசர் ஒரு பக்கம் பார்ப்பது போலவும் மிஸ்கின் இன்னொரு பக்கம் பார்த்து பேசுவது போலவும் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என்பதற்காக பார்ப்பவர்களை இம்சிக்கக்கூடாதல்லவா? (தனியாக ஒருவரை மட்டும் காட்டுவது வேறு)  இருவரும் இரண்டு திசைகளில் பார்த்துக்கொண்டு பேசுவது எப்போதோ ஓரிரு முறையல்ல தொடர்ந்து அப்படியே காண்பித்தார்கள் என்பதுதான் கொடுமை.





        

·         நாதஸ்வரம் தொடரில் மனைவி தொலைபேசியில் அழைக்க காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவளது கணவன் காரை ஓட்டிக்கொண்டே செல்ஃபோனை எடுத்துப் பேச கார் பெரும் விபத்துக்குள்ளாகி படுகாயமடைகிறார் செல்வரங்கம். கணவர் காயமடைய தானே காரணமாகிவிட்டதாக மனைவி புலம்புகிறார். நான் பேசியதால்தானே இப்படி நடந்தது என கணவன் சொல்வதாகக் காட்டியமைக்கு இயக்குனரைப் பாராட்டலாம்.
கூப்பிடுபவர்களுக்கு மறுமுனையில் இருப்பவர் என்ன செய்கிறார் என்று எப்படித் தெரியும். கூப்பிடப்படுபவர் கார் ஓட்டிக்கொண்டிருந்தால் காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு பேசலாம் அல்லது பிறகு பேசுகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டுப் பிறகு பேசலாம். இதனை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி விபத்துக்களை குறைக்க உதவி இருக்கலாம்.. 



·         முந்தானை முடிச்சு தொடரில் பத்திரப் பதிவு அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் கந்தசாமி குடும்பத்தினரும் பழனியப்பனும் நெடுநேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடு வதாகக் காண்பித்தார்கள். ஒரு அலுவலகத்தில் இப்படி சத்தம் போட்டு வாக்குவாதம் செய்வதை யாரும் தடுக்காமல் இருப்பது எப்படி?  வாணி ராணி தொடரிலும் இப்படி காவல் நிலையத்தில் நடக்கிறது இதையும் யாரும் கேட்கவே இல்லை. காவல்நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டர் இல்லை என்று விளக்கம் சொலவார்களோ?!


தெய்வமகள் தொடரில் பிரகாஷ் நாலு லட்சம் பணத்தைக் கடன் வாங்கிக்கொண்டு பைக்கில் நண்பரின் பின்னால் அஜாக்கிரதையாக பணத்தை வைத்துக் கொண்டு செல்வதாகவும  அண்ணியின் கையாள் காரில் பின்தொடர்ந்து வந்து பணத்தைப்பறித்துக் கொண்டு ஓடுவதாகவும் காட்டினார்கள்.  நாலு லட்சத்தை கையில் வைத்திருப்பவர்கள் யாரும் இவ்வளவு கவனக்குறைவாக செல்லமாட்டார்கள். (பத்திரமாக எடுத்துச் செல்லும் போது சாமர்த்தியமாக ஏமாற்றி திருடுவது வேறு) தொடர்களில் மட்டுமே கதையைவளர்க்க இப்படியெல்லாம் காண்பிக்கிறார்கள். இதைப்பிற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்களா?