ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இறந்தவர் பிழைத்து வந்துவிட்டார்!

கதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்’ என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். நான் எழுதியதைப் போலவே இரண்டு மூன்று நாட்களிலேயே அந்தக் கதாநாயகன் செல்வம் ஆந்திர மாநில கடற்கரையோரம் நினைவில்லாமல் கிடந்தார் என்றும் கிராம மக்கள் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்றும் காண்பித்தார்கள்.

வில்லனாகக் கருதப்பட்டவரே (செல்வம் ஏதோ ஒரு நேரத்தில் அந்த சேட்டுக்கு செய்த உதவிக்காக) செல்வத்தைக் காப்பாற்றி அவரது குடும்பத்தினரிடம் கொண்டுவந்து விட்டுவிடுகிறார் என்று கதையைத் திருப்பிவிட்டார்கள். (வில்லனே இப்படி தாமாகவே வந்து கதாநாயகனுக்கு உதவி செய்வதை இது போன்ற தொடர்களில் அல்லது சினிமாக்களில் தான் பார்க்க முடியும் என்பது இன்னொரு கதை)

இனியாவது இது போன்ற நம்பமுடியாத ட்விஸ்ட்களை (திருப்பங்களை) தொடர்களில் வராதமாதிரி திரைக்தையை அமைப்பார்களா தொடர் தாயாரிப்பாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.