திங்கள், 7 நவம்பர், 2011

சீரியல் தயாரிப்பாளர்கள் வித்தியாசமாக யோசிக்கமாட்டார்களா?


ஒருவருக்கு உடல் நலம் திடீரென மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள், மருத்துவர்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் பெற்று வீட்டுக்குத் திரும்புவார்கள். இது தானே சாதாரணமாக வாழ்வில் நடக்கும். 
ஆனால் இந்த தமிழ் டீவி சீரியல்களில் நடப்பது என்ன?   ஒருவருக்கு உடல் நலன் மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள். அங்குள்ள மருத்துவர்கள் அவம்ரை பரிசோதித்துவிட்டு உடல்நலம் ரொம்ப மோசமாக இருக்கிறது,  இன்னும் 24 மணியோ அல்லது 36 மணியோ ஆனால்தான் சொல்லமுடியும் என்று சொல்வார்கள்.
.
அந்த கெடு முடியும் போது “”ஆபரேஷன் அல்லது ட்ரீட்மெண்ட் நல்லபடியாக முடிந்துவிட்டது. நன்கு குணமாகிவிட்டார்-- ஆனால் அவரிடம் எந்த அதிர்ச்சியான செய்தியையும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவரது உயிருக்கேகூட ஆபத்தாகிவிடலாம்”” என்று ஒருவரை தனியாகக் கூப்பிட்டு டாக்டர் சொல்வார். அதனால் சொல்லவந்த முக்கியமான செய்தியை அவரிடம் சொல்வதை சொல்லாமல் தள்ளிப்போடுவார். அதனால் கதையை இன்னும் சில வாரத்திற்கு இழுக்கலாமே!

‘முந்தானை முடிச்சு’ ‘இதயம்’ போன்ற பல தொடர்களில் இப்படித்தான் திரைக்கதையை அமைத்திருந்தார்கள். இப்போது ‘பெண்டாட்டி தேவை’ தொரிலும் அதேகதைதான்.  இவர்கள் எப்போதுதான் வித்தியாசமாக யோசிக்கப்போகிறார்களோ?

3 கருத்துகள்:

  1. நாமும் சீரியல் பாக்கறப்போ மூளை என்பதை கழட்டி வச்சிட்டுத்தான் பாக்கணும் என்ன செய்வது ஆனாலும் இதையும் பலர் ரசிக்கிறார்களே

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஷைலஜா said...
    "நாமும் சீரியல் பாக்கறப்போ மூளை என்பதை கழட்டி வச்சிட்டுத்தான் பாக்கணும் என்ன செய்வது ஆனாலும் இதையும் பலர் ரசிக்கிறார்களே"

    வருகைக்கும பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.